உலகெலாம் ஆக்கி
அகார உகார மகாரமான
ஆதி பரம்பொருளின்
பாதம் சரணம்

அணுவினும் சிறிதான
பெரிதினும் பெரிதான
அன்பே உருவான
ஆண்டவா சரணம்

ஒன்றுமின்றி நின்ற போதும்
ஒன்றே ஒன்றான உன்னில்
ஒன்றி நிற்பதன்றி
வேறொன்றும் வெண்டிலேன் நான்

நின் அன்பில் லயித்து
நின் அன்பில் திளைத்து
நின் அன்பில் கலந்திடும்
வரம் தா இறைவா !